கிணத்துக்கடவு அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் - டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்து

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முள்ளுபாடியில் பணி முடித்து வீடு திரும்பிய டாஸ்மாக் ஊழியர் நாகமாணிக்கம் என்பவரை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியால் தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம் (வயது40). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பணி முடித்து இரவு 11 மணி அளவில் நாகமாணிக்கம் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் நாகமணிக்கத்தை பின்தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் அவரை வழி மறித்து மிரட்டி கத்தியால் குத்தியுள்ளனர்.

நாகமாணிக்கத்தின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். காயங்களுடன் இருந்த நாகமாணிக்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...