கோவை அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்த பாலாமணி, வீட்டின் அருகில் யானை நின்றதை பார்த்து குழந்தைகளுடன் ஓட முயன்றுள்ளார். அப்போது பாலாமணியை யானை தாக்கி காயமடைந்தார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கியதால் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்துவரும் பாலாமணி என்ற பெண், யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த பாலாமணி அவரது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாலாமணிக்கு யானை தாக்கி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் என்பதால் வனத்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...