வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு - போத்தனூர் போலீசார் விசாரணை

கோவை போத்தனூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ், ராஜூ ஆகியோரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...