ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான "ஹாக்கத்தான் 2017" நடைபெற்றது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் கணினி திறன்பேசி மற்றும இணையம் சார்ந்த திட்டப் பணிகளை உருவாக்கும் போட்டி ஹாக்கத்தான் 2017 என்னும தலைப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், திறன்பேசிக்கான செயலிகள், இணையம் பயன்பாடுகள் மற்றும் "இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்" எனப்படும் அனைத்து பொருட்களையும் இணையத்தில் இணைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை 24 மணி நேரத்திற்குள் உருவாக்கும் போட்டியில் மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர்.



இதன் துவக்க விழாவானது கடந்த 17ம் தேதியன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி முதல்வர் சி.நடராஜன், ஹாப் க்ளூஸ் மனிதவளத்துறை தலைவர் பாபு விட்டல் மற்றும் பயோடா நிறுவனத்தின் மூத்த மனியவள அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதில், கல்லூரி முதல்வர் சி.நடராஜன் அனைவரையும் வரவேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது, இக்கல்லூரியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 



இதைத்தொடர்ந்து பேசிய பாபு விட்டல், மாணவர்கள் ஒரு விசயத்தை கையாளுகையில் தனது சிந்தனை திறன் மற்றவர்களை போல் இல்லாமல் புதிய கோணத்தில் இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து, மாணவர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



அடுத்து பேசிய விஜயலட்சுமி, "மாணவர்கள் சுயசிந்தனையுடன் சவால்களை சந்திக்க வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்வின் நிரைவு விழாவில் ஐபிஎஸ் திலீப், இனோஸ்பேஸ் டாக்டர் விமல், டெக்மகேந்திரா நெல்சன், இம்பிசர் கணேஷ் கண்ணா, ராஜ்மோகன் ஆகியோர் மாணவர்கள் உருவாக்கிய செயலிகளை மேற்பார்வையிட்டு அதில் 10 சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...