தாராபுரத்தில் மகளிர் தின சட்டவிழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாமில், நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மகளிர் தின விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.



இந்த மகளிர் தின விழாவில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நீதிபதி பாபு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் கே .கார்வேந்தன், தங்கராஜ், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செழியன், இந்துமதி, தாராபுரம் சார்பு நீதிபதியின் துணைவியார் கௌசல்யா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.



விழாவில் 30 பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.



முன்னதாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டிகள், கோலம் போடுதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...