தாராபுரத்தில் மகளிர் தின சட்டவிழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாமில், நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மகளிர் தின விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.



இந்த மகளிர் தின விழாவில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நீதிபதி பாபு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் கே .கார்வேந்தன், தங்கராஜ், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செழியன், இந்துமதி, தாராபுரம் சார்பு நீதிபதியின் துணைவியார் கௌசல்யா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.



விழாவில் 30 பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.



முன்னதாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டிகள், கோலம் போடுதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...