திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 12.50 லட்சத்திற்கு மக்காச்சோளம் விற்பனையானது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.
திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனைக்குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 55 ஆயிரத்து 821 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.
அதன்படி, விவசாயிகள் கொண்டு வந்திருந்த மக்காச்சோளம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.
இதில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.
அதன்படி, விவசாயிகள் கொண்டு வந்திருந்த மக்காச்சோளம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.