கோவையில் டிஜிபி சைலேந்திரபாபுவை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற வடமாநில தொழிலாளர்கள்!

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார். வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தொழிலாளர்கள் டிஜிபி உடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார்.



கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் வடமாநில தொழிலாளர்கள் சைலேந்திரபாபுவுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.



அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், சேலம் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொழிலாளர்களுடன் இந்தியில் பேசி தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். கோவை மாநகர காவல் துறை என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் டிஜிபி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தொழிலாளர்கள் வீடியோ எடுத்து தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அனுப்ப காவல்துறை சார்பில் அறிவுறுத்தினர்.

அதேபோல டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி தொழிலாளர்களுடன் இந்தியில் பேசினார். புலம்பெயர் தொழிலாளர்கள் டிஜிபி உடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...