துடியலூர் சாய்பாபா கோயில் திருவிழா - 108 பால்குடம் சுமந்து வந்த பெண்கள்!

கோவை துடியலூர் அடுத்த ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோயிலின் 4 ஆம் ஆண்டு திருவிழாவில் 108 பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே சாய்பாபா கோவிலின் 4ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ குபேர ஷீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் 4ம் ஆண்டு விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜை, லட்சுமி குபேர ஹோமம் பூஜையுடன் தொடங்கியது.



இந்த விழாவில் தொப்பம்பட்டி அரசடி ராஜகணபதி கோயிலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் என 108 பேர் பால் குடம் எடுத்து வந்தனர்.



இந்த பால் குட ஊர்வலமானது தொப்பம்பட்டியில் இருந்து ஜங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் சாய்பாபா கோயிலுக்கு வரும் வழியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் வழிபட்ட பின் கோவிலை வந்தடைந்தனர்.



108 கலச பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி அபிஷேக பூஜை ஆராதனை நடைபெற்றது.



தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபராதனை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



மேலும், இதில் நடைபெற்ற பஜனை பாடல் இசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 



பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்குமார், கார்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...