கோவையில் கழிவுநீர் சாக்கடையில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை சவுரிபாளையத்தில் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கருவிகள் மூலம் சாக்கடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதி அன்னை வேளாங்கண்ணி நகரில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு வெளியேற்ற இயலாததால், இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், கருவிகள் மூலம் அந்த சாக்கடையை உடைத்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



சாக்கடையில் விழுந்த பசுவை பத்திரமாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத் மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...