கோவை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு - 7 பேர் சஸ்பெண்ட், 6 பேர் பணியிடமாற்றம்!

கோவை பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின்பால் உற்பத்தி நிறுவனத்தில் 38 லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தணிக்கையில் தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேரை தற்காலிக பணிநீக்கமும், 6 பேரை இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை பேரூர் பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தில், நாளொன்றுக்கு, 2 லட்சத்து, 17 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக பால்கோவா, பால்பேடா, பால் அல்வா, கேரட் மைசூர்பா உள்ளிட்ட 22 வகையான பால் உபபொருட்கள் மற்றும் இனிப்புகள் தயாரித்து, விற்கப்படுகிறது.

இவற்றை விற்பனை செய்ததில், ரூ.38 லட்சம் வரை முறைகேடு மற்றும் கையாடல் நடந்தது கண்டறியப்பட்டது. இதில், தொடர்புடைய மூன்று ஊழியர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக பல்வேறு கட்ட விசாரணை நடத்தியபின், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றபோது கையாடல் மற்றும் முறைகேடு செய்த தொகையை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அறிய தணிக்கையில் ஈடுபட்டபோது முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது. மன்னிக்கக்கூடிய குற்றம் புரிந்த, 6 பேர் தொலைதூர நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பல லட்சம் ரூபாய் முறை கேடு மற்றும் கையாடல் செய்த மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால், அவரது பணப்பலன்களில் இருந்து, முறைகேடு செய்த தொகையை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...