கோவையில் நடந்து சென்றவரை பாட்டிலால் குத்தி வழிப்பறி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மனோகரன் என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, குவாட்டர் பாட்டிலால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி கூலித் தொழிலாளி மனோகரன் (வயது37) என்பவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த கும்பல் குவாட்டர் பாட்டிலை உடைத்து மனோகரனை நெஞ்சுப் பகுதியில் குத்தியதால், அவர் வலியில் அலறித் துடித்தார். காயமடைந்த மனோகரன், அவரின் நண்பரிடமிருந்த 2 செல்ஃபொன்களை பறித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காயமடைந்த மனோகரன், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...