கோவையில் நடந்து சென்றவரை பாட்டிலால் குத்தி வழிப்பறி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மனோகரன் என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, குவாட்டர் பாட்டிலால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி கூலித் தொழிலாளி மனோகரன் (வயது37) என்பவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த கும்பல் குவாட்டர் பாட்டிலை உடைத்து மனோகரனை நெஞ்சுப் பகுதியில் குத்தியதால், அவர் வலியில் அலறித் துடித்தார். காயமடைந்த மனோகரன், அவரின் நண்பரிடமிருந்த 2 செல்ஃபொன்களை பறித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காயமடைந்த மனோகரன், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...