தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. மணியம்மையாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்: தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் அன்னை மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் கொண்டாடினர்.
இதில் அன்னை மணியம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த விழாவிற்கு மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா தலைமை தாங்கினார்.
நிகழ்வில் சண்முகம் பொதுக்குழு உறுப்பினர், தொழிலாளர் அணி மாவட்ட பொருளாளர் மணி, ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.