காய்ச்சல், தலைவலி பாதிப்பு அதிகரிப்பு - வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் அதிகரித்ததை தொடர்ந்து, வால்பாறை, உருளிகல், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் 62 எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வால்பாறை, சோலையார் அணை பகுதியில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவமனை சார்பில், வால்பாறை, கக்கன் காலனி, உருளிகல் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



வால்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டாக்டர் சாமிநாதன் தலைமையிலும், கக்கன் காலனி பகுதியில் சித்தா டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலும், உருளிகல் எஸ்டேட் பகுதியில் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...