பல்லடம் அருகே அண்ணமார் கோயிலில் படுகளம் சாய்தல் நிகழ்ச்சி - 21ஆண்டுக்குப் பின் நடந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் அண்ணமார் கோயிலில் நடைபெற்ற படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரம் கிராமத்தில் அண்ணமார் திருக்கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

கி.பி 1020-ம் நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு படுகளம் கன்னிமார் மற்றும் குளக்கரை கருப்பசாமி, மகாமுனி, பொன்னர் – சங்கர், தங்காள் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.



ராசா கவுண்டம்பாளையம், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.



பொன்னர் சங்கர் படுகள பாடலைக் கேட்டு ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஆங்காங்கே மருள் வந்து படுகளம் சாய்ந்தனர்.



இவர்கள் அண்ணன்மார் தெய்வங்களுடன் இணைந்து போரிட்டு மடிந்தவர்களாக பார்க்கப்படுகிறது.



அவர்கள் அனைவரும் போரிட்டு மடிந்தவர்களாக வரிசைப்படுத்தப்பட்டு, மாகாளியம்மன் ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தக்குடத்தினை சிறுமி ஒருவரிடம் கொடுத்து பின் மாண்டவர்களாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள் மீது தீர்த்தத்தை தெளிக்க அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்தது போன்ற நிகழ்வு நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு வீரப்பூரில் நடைபெறுவது போலவே 21 ஆண்டுகளுக்குப் பின் பல்லடம் அருகே மாணிக்கபுரத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...