நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக கர்நாடக மாநில குண்டல் பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட குண்டல்பேட்டை காவல் துறையினர் ஒரு காரில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, இக்கடத்தலில் ஈடுபட்ட சேரம்பாடியைச் சேர்ந்த சோமன் (50), எருமாடு பகுதியைச் சேர்ந்த மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம் திருசூர் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகிய மூன்று பேரையும் குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், புலனாய்வு குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை நாகராஜ் ஆகியவர்கள் சுற்றி வழைத்து பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களிம் இருந்து 3 யானை தந்தம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கேரள பதிவு எண் கொண்ட மாருதி கார் ஆகியவை பரிமுதல் செய்யப்பட்டது.
இதில், சோமன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குண்டல்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கோபி அவர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.