நீலகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது


நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக கர்நாடக மாநில குண்டல் பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட குண்டல்பேட்டை காவல் துறையினர் ஒரு காரில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, இக்கடத்தலில் ஈடுபட்ட சேரம்பாடியைச் சேர்ந்த சோமன் (50), எருமாடு பகுதியைச் சேர்ந்த மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம் திருசூர் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகிய மூன்று பேரையும் குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், புலனாய்வு குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை நாகராஜ் ஆகியவர்கள் சுற்றி வழைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களிம் இருந்து 3 யானை தந்தம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கேரள பதிவு எண் கொண்ட மாருதி கார் ஆகியவை பரிமுதல் செய்யப்பட்டது.

இதில், சோமன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குண்டல்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கோபி அவர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...