கோவையில் இருந்து வடக்கு கோவாவுக்கு புதிதாக விமான சேவை - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

முக்கிய சுற்றுலா தலமான வடக்கு கோவாவிற்கு கோவையில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் வடக்கு கோவாவிற்கு விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வடக்கு கோவாவிற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவாவில் சமீபத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் வடக்கு கோவாவில் திறக்கப்பட்டது. வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் ரூ.2,870 கோடி மதிப்பீட்டில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வடக்கு கோவாவையே சுற்றுலா தலமாக தேர்வு செய்வதால் அப்பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வாரத்தில் 4 நாட்கள் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான சேவையானது திங்கள் கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...