அக்னிபாத் திட்டத்தால் ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றம் - திருப்பூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு அக்னிபாத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் மற்றும் துணை இயக்குனர் மதன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளம் வயதினர் ராணுவத்தில் தங்களை இணைத்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக உடல் தகுதி தேர்ச்சி பெற்ற பின் எழுத்து தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு உடல் தகுதி தேர்வு செய்யப்படுவது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும் மாணவர்கள் ராணுவ அதிகாரிகளுடன், கலந்துரையாடி தங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...