உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டிய வாகனம் - விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம்!

உடுமலை அடுத்த பட்டிவீரன்பட்டியில் உள்ள குளத்தின் அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.6,000 அபராதம் விதித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தில் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள குளம் அருகே கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் காலாவதியான ஊசி, மருந்து, மாத்திரைகள், பவுடர் ஆகியவை மூட்டை மூட்டையாக கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகல் நேரத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை கண்ட விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகம் காலாவதியான மருந்துகளை விவசாய நிலங்களில் கொட்டிய மருந்து கம்பெனி நிறுவனத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ள நிலையில் குளம் அருகே ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு தினமும் விட்டு வருகின்றனர். இந்த நிலையில் காலாவதியான மருந்துகளை உட்கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

மேலும் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கும் அபாயம் இருந்த நிலையில் விவசாயிகள் தீவிரமாக கண்காணித்து இன்று மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.

ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக குறைந்தபட்சம் அபராத தொகை விதித்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...