தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 16 வழக்குகள் ரூ.56.88 லட்சத்திற்கு சமரசம் செய்யப்பட்டது.

வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான 16 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.



தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபுதலைமையில், மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

வழக்கறிஞர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 16 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.56,88,000. இதில் 30 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியினை வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...