வெள்ளலூரில் குடும்பத்தகராறில் கணவரை வெட்டிய மனைவி - பரபரப்பு!

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி -செல்வி தம்பதி பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், மகளை சந்திக்க வந்த சுப்பிரமணியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் கணவரை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை மனைவியே கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (44) -செல்வி தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி சூர்யா (21) என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சுப்பிரமணி மற்றும் செல்வி ஆகிய இருவரும் பிரிந்து சுப்பிரமணி தனியாகவும், செல்வி மகன் மற்றும் மகளுடனும் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே அடிக்கடி தனது மகள் பவித்ராவை மட்டும் தந்தை சுப்பிரமணி சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். வழக்கம்போல சுப்பிரமணி நேற்று முன்தினம் தனது மகள் பவித்ராவை சந்தித்து பேசி விட்டு, செலவிற்கு பணம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மகன் சூர்யா, சுப்பிரமணியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். உடன் இருந்த மனைவி செல்வி திடீரென வீட்டில் இருந்த கத்தியால் சுப்பிரமணியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை மகள் பவித்ரா மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார், மனைவி செல்வி மற்றும் மகன் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியே கணவரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...