கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கோவை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை மாகர் மாவட்ட செயலாளரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.