கோவையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பார்வையாளர்களை வியக்க வைத்த குழந்தைகள்

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் “யாதுமாகி நின்றவள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



கோவை: கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

கோவையில் இயங்கி வரும் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் என்ற தனியார் அமைப்பு, பெண் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இந்த அமைப்பு மூன்றாவது ஆண்டாக "யாதுமாகி நின்றவள்" எனும் தலைப்பில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி வணிக வளாகத்தில் நடத்தியது.



இதில் பெண்கள் தங்களது முயற்சியில் தயாரித்த ஆடைகளை அவர்களது குழந்தைகளுக்கு அணிவித்து அணிவகுப்பில் பங்கேற்க வைத்தனர்.



இதில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வந்த குழந்தைகள், ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.



மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...