தாராபுரம் அருகே அரசு அலுவலகம் முன்பு மது விற்பனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் சாலையில் காரையூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரமியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து மதுக்கடையில் உள்ளவர்கள் காலையில் 6 மணி முதல் டீ குடிப்பது போல் கூலித்தொழிலாளர்களுக்குத் தினசரி அப்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகிலும், கிராம நிர்வாக அலுவலக முன்பும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மது விற்கப்பட்டு வருகிறது.

அதனை அந்த பகுதி கூலித்தொழிலாளர்கள் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தினசரி சாலையில் சுற்றித் திரிந்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுவிற்கும் நபர் தனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார்.

இவ்வாறு மது விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...