தாராபுரம் அருகே அரசு அலுவலகம் முன்பு மது விற்பனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் சாலையில் காரையூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரமியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து மதுக்கடையில் உள்ளவர்கள் காலையில் 6 மணி முதல் டீ குடிப்பது போல் கூலித்தொழிலாளர்களுக்குத் தினசரி அப்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகிலும், கிராம நிர்வாக அலுவலக முன்பும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மது விற்கப்பட்டு வருகிறது.

அதனை அந்த பகுதி கூலித்தொழிலாளர்கள் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தினசரி சாலையில் சுற்றித் திரிந்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுவிற்கும் நபர் தனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார்.

இவ்வாறு மது விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...