உப்பிலிபாளையத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.


கோவை: உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு மற்றும் சௌரிபாளையம் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர், செயலாளர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகள் மற்றும் சௌரிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 528 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக குடியிருப்போர் நசை சங்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.



மேலும் மறுகட்டுமானம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இக்குடியிருப்பு சங்கங்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் இதுகுறித்து குடியிருப்போர்களிடம் தெரிவித்து சங்கம் இசைவு தெரிவித்தவுடன், மறுகட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...