சாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் - உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டத்தில் வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டம், உடுமலையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ரீதியான ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில், சங்கரின் மனைவி கௌசல்யா, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கனகராஜ், தமிழ்ப்புலிகள் அமைப்பை சார்ந்த நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இரா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய விடுதலையில் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், சாதி ஆணவ கொலைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதாலேயே ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கப்படுகிறது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தாத போராட்டங்களே இல்லை. தொல்.திருமாவளவன் பேசாத பேச்சுக்களே இல்லை. ஆணவக் கொலைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதிய ஆணவப்படு கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...