திருப்பூர் மாவட்டத்தில் 93 மையங்களில் 12 பொதுத்தேர்வு - மாநகராட்சிப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 160 மாணவ, மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி ஜெயா பாய் பள்ளியில் பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2023-க்கான பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

இந்தத் தேர்வானது வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 93 தேர்வு மையங்களில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும்; தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் முதல் நாளான இன்று திருப்பூர் ஜெயா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...