கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம்

கோவையில் நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகள், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டன.


கோவை: கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) சுகாசினி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் மூலம் நவீன இணையவெளி குற்றங்கள் மற்றும் எதிர்கால இணைய வழி குற்ற அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



இதில், நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகளும், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள், பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் Online பண பரிமாற்றத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.



மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....