கோவையில் நாளை கல்விக் கடன் முகாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்காக ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் உதவி பெறுவதற்கான முகாம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கிழ்கண்ட ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 (மாணவர் மற்றும் பெற்றோர்) மற்றும் ஆதார் அட்டை(மாணவர் மற்றும் பெற்றோர்)

2. பான்கார்டு/பாஸ்போர்ட்/விசா நகல்

3. இருப்பிட சான்று

4.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம்-16/16ஏ

5. தாசில்தாரிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட வருமான சான்றிதழ்

6. அரசு ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற சான்று

7. SSLC HSC மற்றும் டிகிரி: மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்

8. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான கடிதம்

9. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டண விவர கடிதம்

10. கடைசி ஆறு மாதங்களுக்கு வரவு செலவு மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஆகியவை எடுத்து வந்து அணுகவும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...