ஜல்லிக்கட்டு குறித்த ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து எழுதிய Thunderous Run Bountiful Harvest எனும் ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.


சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து கார்த்திகேய சிவ சேனாதிபதி எழுதிய Thunderous Run Bountiful Harvest என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் "Thunderous Run Bountiful Harvest" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை எழுதிய கார்த்திகேய சிவ சேனாதிபதி பேசுகையில், 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மெரினா புரட்சியை தொடர்ந்து நாங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் சட்ட சிக்கலை தீர்க்க வாதிடும் போது குதிரை பந்தயத்திற்கு இருப்பது போல் ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தோம். எனவே அப்போது அதை தொகுக்கும் முயற்சியில் இறங்கினோம். இதில் என்னுடன் ரோஜா முத்தையா, இயக்குனர் சுந்தர் மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் ஆகியோரின் முயற்சியின் விளைவாக அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை இந்த புத்தகத்தில் தொகுத்துள்ளோம், என்றார்.

நிகழ்ச்சியில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார், ரோஜா முத்தையா, நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...