கோவை ஈசா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க கோரிக்கை.


கோவை ஈசா யோகா மையத்தில் மலை தள பாதுகாப்பு துறை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சிலை திறப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாக சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையமானது அமைந்துள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆதியோகி சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சிலையை திறந்து வைக்கின்றார். இந்நிலையில் ஈசா யோகா மையமானது மலைதள பாதுகாப்பு துறையிடம் சிலை அமைக்க அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடன் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். மேலும் அனுமதி பெறாத சிலையை திறக்க இந்திய பிரதமர் மோடி வந்தால் அவருக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாகவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள  ஆதியோகி சிலை திறப்பு தொடர்பாக ஈசா மையம் வைத்துள்ளா விளம்பரங்களை அகற்ற வேண்டும் எனவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கோவையில் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம், மலைதள பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க அனுமதித்துள்ளதாகவும் சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...