கோவையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை பீளமேட்டில் கதிரேசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகர் மெளனசாமி நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிஜெயராணி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதேப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அவர் கோவைக்கு திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 லட்சம் தொகை, 19 பவுன் நகை, 4,800 எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்கள், 160 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...