கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் - பிரபல வங்கிகள் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்காக நடந்த கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடக்கி வைத்தார். ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று மாணவர்களுக்கு கடனுதவி வழங்கின.


கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெறுகிறது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கிகள் கடன் உதவிகளை வழங்குவதற்காக பங்கேற்றுள்ளன. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர்.



முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் பேசினார். பின்னர், முகாமினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.



ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன. இந்த முகாம்கள் மூலம் 350 கோடி வரை கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...