பல்லடத்தில் மதுபோதையில் மயங்கிக் கிடந்த வி.ஏ.ஓ - வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு!

பணிநேரத்தில் மதுபோதையில் இருந்த திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் ஜெய்சிங் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன். நேற்று மதியம் மாதப்பூர் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் என்பவர் சாலை பிரச்சனை குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனிடம் பேச அவரை தொடர்பு கொண்டார்.



அப்போது பாலசுப்பிரமணியத்திடம் மதுபோதையில் இருந்த வி.ஏ.ஓ ஜெகநாதன் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை பாலசுப்பிரமணியம் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஒரு வீட்டின் அருகே ஜெகநாதன் மதுபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பணி நேரத்தில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த ஜெகநாதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டபோது, பணி நேரத்தில் மது போதையில் இருந்த ஜெகநாதன் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பணி நேரத்தில் மது போதையில் மயங்கி கிடந்த கிராம நிர்வாக அலுவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...