ஆர்.டி.ஓ சேவை கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு

ஆர்.டி.ஓ சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.



வட்டார போக்குவரத்து துறையின் பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 200 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் ஏற்கனவே பொருளாதார சுமையில் தவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் மாவட்ட சூழலுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனு அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...