ஆர்.டி.ஓ சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.

வட்டார போக்குவரத்து துறையின் பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 200 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் ஏற்கனவே பொருளாதார சுமையில் தவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் மாவட்ட சூழலுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனு அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வட்டார போக்குவரத்து துறையின் பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 200 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் ஏற்கனவே பொருளாதார சுமையில் தவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் மாவட்ட சூழலுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனு அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.