வங்கிகளில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்- பாஜக இளைஞர் அணி

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசால் அங்கீகரிப்பட்டு ரிசர்வு வங்கியால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. 

ஆனால் பெரும்பாலான கடைகள், வங்கிகள், பேருந்துகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். 

இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தவறான பிரச்சாரங்களால் தான் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் வங்கி வாசலில் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பாஜக இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...