கூடலூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் - உற்சாகமாக பங்கேற்ற கோவை கல்லூரி மாணவிகள்!

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தெற்குபாளையத்தில் கடந்த மார்ச் 7முதல் 13 வரை நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில், கோவையை சேர்ந்த அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் இறுதி நாள் நிகழ்வில் அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்கோவையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், உள்துறை வடிவமைப்பு, மேலாண்மை துறை, உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை துறை குழு எண் 1-ன் சார்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற்றது.



இந்த சிறப்பு முகாமில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சக்திதேவி மற்றும் முனைவர் சு.கார்த்திகா ஆகியோருடன் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். வீட்டுக் கணக்கெடுப்பு, யோகா பற்றிய விழிப்புணர்வு, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.



மேலும் பூங்கா சுத்தம் செய்தல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், குழந்தைகள் மையத்திற்கு விளக்கப்படம் தயாரித்தல், சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள், சிறுசேமிப்பு மற்றும் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன.

குறிப்பாக ஊர் மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பொதுநலப் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் உணவு முறை ஆலோசனை வழங்குதல் ஆகியவை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேலான கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தெற்குப்பாளையம் அடுத்த கென்னடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நீர் சேகரிப்பு மற்றும் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணியும் மாணவிகளால் நடத்தப்பட்டது.



தொடர்ந்து இறுதி நாள் நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கலந்து நாட்டு நலத்திட்ட மாணவிகளை வாழ்த்திப் பேசினார். மேலும் நாடு நலப்பணி திட்ட மாணவிகள் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ, நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், பக்கெட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்களான முருகானந்தம் மற்றும் கீர்த்தனா உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...