காரமடையில் கோழிக்கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு

கோவையை அடுத்த காரமடையில் கோழிகழிவுகளை சேகரிக்கும் மையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: காரமடையில் கோழிக்கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் எம்.ஆர் நகர், சிவாஜி நகர், அப்துல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

எம்.ஆர். நகர், சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.

அதன்பின் இந்த கழிவுகளை ஒரு கலவையாக்கி சென்னையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். கோழி கழிவுகளால் இப்பகுதி சுற்றிலும் காற்று மாசுபடுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் இப்பகுதியினர் தொடர்ந்து வீடுகளை பூட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாகச் சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் புகார் தெரிவித்து, அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதையடுத்து இன்று இப்பகுதியில் சேகரித்து வைத்துள்ள கோழிக்கழிவுகளை அப்புறப்படுத்த கோரியும் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே இப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும், கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட நபரின் வீடு முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காரமடை துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கோழி கழிவுகள் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து குடியிருப்புக்கு நடுவே ஏற்படுத்தி வைத்திருந்த கொட்டகையைக் கிராம மக்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் 3 மணி நேரத்தில் அப்புறப்படுத்துவதாகக் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...