முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கு எதிரானது- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி செய்தியாளர்களிடயே பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக-வின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத்தகுதியில்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறாது என்று எடப்பாடி அறிவித்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போதைய முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வள சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது ஆரோக்கியமான முன்னுதாரனம் அல்ல. 

எனவே, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது. அவ்வாறு பிரதமர் வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதிகளில் பிரதமரை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதே போல் நாட்டில் அச்சு ஊடக உரிமையாளர்கள் செய்தியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளால் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குமாரசாமி  கோரிக்கை விடுத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...