தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடியான வேலைப் பணிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், தமிக அரசால் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாகவும், நேர வரையரை இன்று வேலை வாங்குவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.