தாராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் - விரைவில் திறக்க கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.2.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் பார்வையிட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், இந்த மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டடம் தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் உள்பட அனைத்தும் விவசாய துறைகளும், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடங்களை உடனடியாக திறப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்கள் தொடர்பாக உள்ள சந்தேகங்களை போக்கவும், தொழில்நுட்ப வசதியை பெறவும், வேளாண் இடுப்பொருட்களை பெறவும், ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் பெற இயலும். கட்டிட பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆனநிலையில் வேளாண்மை மையத்தை திறக்க இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் அலங்கயம் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் ஏ.காளிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர், “ விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஆலோசனை பெற்று இடுபொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சியில் சேரன் நகரில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, விவசாயிகள் நலக்கருதி, காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...