கோவை விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து 6 மாதங்களாகியும், டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. இதனால் சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: விளாங்குறிச்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.
திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குவருபவர்கள் மதுவை வாங்கி வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது.
எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.
திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குவருபவர்கள் மதுவை வாங்கி வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது.
எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.