கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல்

கோவையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 குழுவினர், நேற்று மாலை 4 மணியளவில் துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.



இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வாளர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போதுஒவ்வாரு அறைகள், மேஜைகள், குப்பை தொட்டி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். அதில், வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதேபோல், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.13,500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...