கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல்

கோவையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 குழுவினர், நேற்று மாலை 4 மணியளவில் துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.



இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வாளர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போதுஒவ்வாரு அறைகள், மேஜைகள், குப்பை தொட்டி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். அதில், வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதேபோல், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.13,500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...