பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காரேகவுண்டம்பாளையம் பகுதி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி செய்துதரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறோம்.



எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயின்று வருகின்றனர். ஆனால் எங்கள் ஊரிலிருந்து பள்ளியானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளி செல்லும் எங்களது குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளத்திலும், கரடு முரடான பாதைகளிலும் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகின்றனர். 

அவர்கள், தினமும் இவ்வாறு நடந்து செல்வதால் உடல்நிலை சரியில்லாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அவர்களது பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பகுதிக்கு வாகன வசதி செய்துதர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...