உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்


2016 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலுக்கான பணிகளை 31 டிசம்பர் 2016 தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதி மன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விலக்கம் கேட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மாநில தேர்தல் ஆணையமானது, பொது தேர்வுகள் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், வரும் 2017 மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, நீண்ட மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வரும் மே 15 ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...