கோவை மத்திய சிறப்பு காவல்ப்படை பயிற்சி கல்லூரியில் காவல் துறை ஆணையாளாராக பொறுப்பேற்கும் பி.எஸ்.சவ்ஹான் (ஐஜிபி)


காவல் துறை தலைவர் பி.எஸ்.சவ்ஹான், காவல் துறை ஆணையாளாராக தொப்பம்பட்டியில் உள்ள மத்திய சிறப்பு காவல்ப்படை மத்திய பயிற்சி கல்லூரியில் முதல் முறையாக பொறுப்பேற்க்க உள்ளார்.

இவர் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் ஆபு பயிற்சிக் கல்லூரியில் வந்துள்ளார். பி.எஸ்.சவ்ஹான் 1984-ல் நேரடியாக மத்திய சிறப்பு காவல்படையில் சேர்ந்தார். 

இவரது சொந்த ஊர் ஜோத்பூர் மாவட்டம் இராஜஸ்தான் மாநிலம் ஆகும். பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற இவர் தொடர்ந்து ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். 

பி.எஸ்.சவ்ஹான் தனது 33 வருடத்தில் பஞ்சாப், அசாம், அருணாச்சலப்பிரதேசம், ஸ்ரீநகர் (ஜம்மு- காஷ்மீர்) போன்ற மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.

பி.எஸ்.சவ்ஹான் ஜனவரி 26, 2009-ம் ஆண்டு ஜனாதிபதி விருது கடினமான உழைப்பிற்காகவும் மற்றும் காவல் துறை பதக்கம், உள்துறை பாதுகாப்பு பதக்கம் போன்ற பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

காவலர் அகாடெமியில் பல்வேறு வித பயிற்சி பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார். இவர் பணிநிமித்தத்தின்போது பல்வேறு விதமான பயிற்சிப் பிரிவுகளில் ராணுவம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளிலும் பற்பல சிறப்புவாய்ந்த பிரிவுகளில் திறம்பட பயிற்சிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மத்திய சிறப்பு காவல்படை பி.எஸ்.சவ்ஹான், மத்திய சிறப்பு பயிற்சி கல்லூரியில் முதல்வராகவும், காவல்துறை தலைவராகவும் கோவை தொப்பம்பட்டியில் பொறுப்பேற்க உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...