காவல் துறை தலைவர் பி.எஸ்.சவ்ஹான், காவல் துறை ஆணையாளாராக தொப்பம்பட்டியில் உள்ள மத்திய சிறப்பு காவல்ப்படை மத்திய பயிற்சி கல்லூரியில் முதல் முறையாக பொறுப்பேற்க்க உள்ளார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் ஆபு பயிற்சிக் கல்லூரியில் வந்துள்ளார். பி.எஸ்.சவ்ஹான் 1984-ல் நேரடியாக மத்திய சிறப்பு காவல்படையில் சேர்ந்தார்.
இவரது சொந்த ஊர் ஜோத்பூர் மாவட்டம் இராஜஸ்தான் மாநிலம் ஆகும். பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற இவர் தொடர்ந்து ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார்.
பி.எஸ்.சவ்ஹான் தனது 33 வருடத்தில் பஞ்சாப், அசாம், அருணாச்சலப்பிரதேசம், ஸ்ரீநகர் (ஜம்மு- காஷ்மீர்) போன்ற மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
பி.எஸ்.சவ்ஹான் ஜனவரி 26, 2009-ம் ஆண்டு ஜனாதிபதி விருது கடினமான உழைப்பிற்காகவும் மற்றும் காவல் துறை பதக்கம், உள்துறை பாதுகாப்பு பதக்கம் போன்ற பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
காவலர் அகாடெமியில் பல்வேறு வித பயிற்சி பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார். இவர் பணிநிமித்தத்தின்போது பல்வேறு விதமான பயிற்சிப் பிரிவுகளில் ராணுவம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளிலும் பற்பல சிறப்புவாய்ந்த பிரிவுகளில் திறம்பட பயிற்சிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய சிறப்பு காவல்படை பி.எஸ்.சவ்ஹான், மத்திய சிறப்பு பயிற்சி கல்லூரியில் முதல்வராகவும், காவல்துறை தலைவராகவும் கோவை தொப்பம்பட்டியில் பொறுப்பேற்க உள்ளார்.