பல்லடம் அருகே பி.ஏ.பி வாய்க்காலை சேதப்படுத்திய குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

பல்லடம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் சேதப்படுத்தப்பட்ட பி.ஏ.பி வாய்க்காலை பொதுப்பணித்துறையால் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வாய்க்காலை சேதப்படுத்தியதால், குவாரி உரிமையாளர் பிரகாஷ் மீது மங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலை சேதப்படுத்திய குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



பல்லடம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரி உரிமையாளர் பிரகாஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆசியாவின் பொறியியல் அதிசயம் என போற்றப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கிளை வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு முக்கிய ஜீவாதாரமாக விளங்கிய இந்த கிளை வாய்க்காலை சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை மீண்டும் சீரமைத்து கொடுத்தனர்.



இந்நிலையில் மீண்டும் குவாரி உரிமையாளர் பிரகாஷ் பிஏபி கிளை வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி பணிகளை மேற்கொண்டதால், 140 மீட்டர் தூரத்திற்கு கிளை வாய்க்கால் முழுவதுமாக காணாமல் போனது.

இதுதொடர்பாக விவசாயிகள் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடவே, நேற்று முன்தினம் சேதமடைந்த வாய்க்காலை பல்லடம் காவல்துறை மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஷியாமளா அளித்த புகாரின் பேரில் மங்கலம் காவல் நிலையத்தில் குவாரி உரிமையாளர் பிரகாஷ் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கக்கூடிய பிஏபி வாய்க்கால் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதால் 138 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதேபோன்று கனிம வள சட்ட விதிகளின்படி நீர் நிலைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் பிரகாஷ் கல்குவாரிக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி தொழில் செய்யும் பிரகாஷ் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காணாமல் போன வாய்க்காலை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...