'கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை' சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் விளக்கம்.


சின்னமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்குமார், 35, தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதனை அடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹனீபா, 78 என்ற முதியவரும் தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு, தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் உயிரிழப்பு இல்லை என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஓ. பானுமதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொது "கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போர் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் 68 பேர்  சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதில் நேற்று 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதார துறையில் போதுமான மருந்துகள் கைவசம் உள்ளன. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...