கோவையில் சுரங்கப்பாதை தடுப்புத் தூண் விழுந்து விபத்து - அரசுப் பேருந்து சேதம்

கோவையில் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இருந்த சுரங்கப்பாதை தடுப்பு தூண் திடீரென விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியிலே லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு, சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்துச் சென்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர், இரும்பு தடுப்பு மீது மோதியது.



இதனால்இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை.



இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார்தடுப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாற்று பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இரும்பு தடுப்பு விழுந்த போது இரு சக்கர வாகனங்கள், கார்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...